காத்திருப்போடு காதல்
புதுமையானது என்றும்
இது இனிமையானது
புரிந்திராத பல கதைகளை
சொல்லாமல் சொல்லித்தருவது
சொல்லமுடியாத சுகமது
சொல்லிலடங்கா சுகமது
காதலுக்காய் காத்திருப்பது
காலமது விரைந்து செல்வதும்
கடக்காமல் முறைத்து நிற்பதும்
காதலிலேயே சாத்தியமாகிறது
செடியில் பூத்து குலுங்கும்
எல்லா மலர்களுமிங்கு
பூமாலையாய் ஆவதில்லை
கண்ணீரோடு சாரளத்தின்
வழியில் விழிநீர் சுரந்து
வருவானோ அவனென்று
ஏங்கித்தவிக்கும் நேரமது
கொடியது கொடியது இங்கு
காதலோடு காத்திருக்கும்
காலம் மிகவும் கொடியது,,,
காதலின் காத்திருப்போடு நான் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...