சனி, 22 மார்ச், 2014 கடவுள் தந்த பரிசு

சித்திரத்திலும் கண்டதில்லை
இத்தனை அழகு - பெண்ணே

தாயின் கருவில்
உனை வரைந்த ஓவியனை
கடவுளென்றால் அதில் பொய்யில்லை

கண்ணுக்கினிய உனைக் களவாடி
மனதுக்குள் ஒளித்துக்கொண்டேன்
என் கருவிழிக்குள்

நீ பதிந்த மறுகணமே
களவாடி தவறிழைத்தேனோ ?
மனம்பதறி கண்விழித்தேன்

ஓ ................... என்ன இது !
கவிஞர்களின் கற்பனைக்குள்
அடங்காத பிம்பம்
கணினி கொண்டும்
தீட்டமுடியா ஓவியம்
நான் சூடிய மணமாலை சுமந்து
என்னருகே என் தோளோடு

கடவுளெனும் ஓவியனே
நீ வரைந்த ஒவியமதை
களவாட நினைத்தேன்
பரிசளித்தாய் எனக்கே எனக்காய் .

எழுதியவர் : கோ. தினகரன் (22-Mar-14, 4:22 pm)
பார்வை : 103

மேலே