நித்தம் காதல் சப்தம்

நித்தம் என்னுள் ஒலிக்கும்
உன் பெயரின் சத்தம் கேட்டு
சிலிர்க்கும் என் சித்தம்
உன் காதல் நினைவில்
தினமும் நிகழ்கிறது
என்னுள் காமயுத்தம்

இவளின் உள்நரம்புகள்
தத்தம் பணியென உள்ளே
ஒன்றாய் கத்தும் - இவள்
பித்(து)தம் பிடித்தவளாய்
மாறிடுவாள் மொத்தம்

ரத்தம் சூடேறி
மோகம் ஏ(ற்று)த்தும்
புத்தம் புது மலராய்
இவள் பூத்தும்
இவள் இதழ்கள் முத்தம்
பருக தேனை ஊ(ற்று)த்தும்

அவள் மனதுள்
அரங்கேறும் கூத்தும்
அதை காணாமலிருக்க
கண்கள் கதவை சாத்தும்

...கவியாழினிசரண்யா ...

எழுதியவர் : கவியாழினிசரண்யா (22-Mar-14, 4:57 pm)
பார்வை : 288

மேலே