பெற்றோரே உணர்வீரே

ஆண்டுத் தேர்வு முடிஞ்சாச்சு
கோடை விடுமுறை விட்டாச்சு
படிச்சுப் படிச்சு களைப்பாச்சு
ஓய்வு எமக்கு கிடைச்சாச்சு
மதிப்பெண் பயமும் போயாச்சு
மகிழ்ச்சி எம்முள் பூத்தாச்சு ....!!!

புத்தகம் புரட்டத் தேவையில்லை
வீட்டுப் பாடமும் இனியில்லை
இரண்டு திங்கள் முழுமையுமே
இனிதாய் நாட்கள் நகர்ந்திடுமே
நினைத்த நேரம் தூங்கிடலாம்
நடுநிசியில் கனவில் விழித்திடலாம் ...!!!

டிவியில் கார்ட்டூன் கண்டிடலாம்
வீடியோ கேம்ஸ்சில் கலக்கிடலாம்
வீதியில் கிரிக்கெட் ஆடிடலாம்
தியேட்டரில் படமும் பார்த்திடலாம்
பேஸ்புக் சாட்டிங் செய்திடலாம்
பேசியே பொழுதை ஓட்டிடலாம் ...!!!

போட்டக் கணக்கு தப்பாச்சு
நினைத்தது எல்லாம் வெறுப்பாச்சு
காலை மாலை வெவ்வேறு
வகுப்பில் சேர்த்தனர் பெற்றோரே
ஆட்டம் போடவும் நேரமில்லை
ஓய்வு எடுக்கவும் வழியுமில்லை .....!!!

அறுபது நாட்கள் அவஸ்தைதான்
பள்ளி செல்வதே இனிமைதான்
நாளும் பாடம் படிக்கின்றோம்
பாரம் சுமந்தே செல்கின்றோம்
விடுப்பிலும் சுதந்திரம் இல்லையெனில்
கடுப்பே வாழ்க்கை உணர்வீரே ....!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (29-Mar-14, 4:17 pm)
பார்வை : 91

மேலே