ஓர் குருவின் பார்வை

பார்வையால் பார்தனில் சாருயிர் சேர்ஊழ்அழித்து
சோர்வழித்து சீர்செய்து வார்த்தையால் வார்த்தங்கே
பார்த்தனாக்கி பார்த்தசாரதியாகி கூர்கருணையால் ஈர்த்தே
சேர்த்தே சேரடிசேர்க்கும் பார்வை ஓர் குருவினது
***************************************************************************
1.பொருள்
தன் பார்வையாலே உலகத்தில் தன்னை சாரும் உயிர் அதனின் சேர்கின்ற பாவத்தை (ஊழ்) அழித்து அவ்வுயிரின் சோர்வினையும் அழித்து சீர் செய்து வார்த்தையால் (உபதேசம் போன்றவை) வார்த்து அல்லது வடித்து அர்ஜுனன் போல் ஆக்கி தானே பார்த்த சாரதியுமாகி கூர் கருணையால் ஈர்த்து பின் சேர்த்து இறைவனுடைய சேர அடி சேர்க்கும் பார்வை ஒரு குருவின் பார்வை

எழுதியவர் : குருவருள் கவி (3-Apr-14, 8:29 am)
பார்வை : 114

மேலே