ஹைக்கூ சென்றியு கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

எடுத்து ஊதும் வரை
அமைதி காத்தது
புல்லாங்குழல் !

வளர்கின்றன
கண்ணுக்குத் தெரியாமலே
வேர்கள் !

வேர் குடித்தது நீர்
பூத்தது பூ
மரத்தில் !

உணர்த்தியது
ஓவியன் ஆற்றல்
ஓவியம் !

பேசுகின்றனர்
கிண்டல் கேலி
நேர்மையாளனை!

உழவனை மட்டுமல்ல
குயவனையும் வாட்டியது
உலகமயம் !

ஏற்றுமதி சுருங்கி
இறக்குமதி பெருகியது
தாராளமயம் !

எங்கும் எதிலும்
நிறைந்து உள்ளன
ஊழல் !

உடல் இங்கு
உள்ளம் அங்கு
வகுப்பறையில் மாணவன் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (3-Apr-14, 9:03 pm)
பார்வை : 94

மேலே