நகங்கள்

திரிசூலம் கொண்டது
மூன்று முனை..
கைவிரல் கொண்டதோ
பத்து கூர்முனை...
ஆயுதமில்லா
ஆபத்தில்
காக்க முளைத்த
கர்ண கவசம்....
எடுத்த பின்னும்
குறையாதுயரும்
அட்சய ஆயுதம்.