முயற்சி

முயலை ஆமை வென்றது போல்
முயன்று நானும் வாழ்கின்றேன்
முயன்று முயன்று நானுமே
துவண்டுதுவண்டு போகின்றேன்
துவளுகையில் என்னை நானே தேற்றுகிறேன்
தேற்றுவாரின்றி வாடுகிறேன்
வாட்டம் தவிர்ந்து மீண்டும் எழுந்து வாழ்கின்றேன்
வாழ்வை வெட்டியாய் போக்காமல்
வாழத்தான் முயல்கின்றேன்
என்னை தேற்றிட செய்வதெது அறியாது
என்னுள் னானறியாது விழிக்கின்றேன்
எழுப்பியவன் என்னுள் கரைந்தானே
என்னை வெற்றி பெற செய்வானே

எழுதியவர் : சுந்தரகவி (12-Apr-14, 5:44 pm)
சேர்த்தது : sundarakavi
Tanglish : muyarchi
பார்வை : 271

மேலே