அன்பின் தேடல்

தனித்து நான் இருக்கையிலே
தாழம் பூவும் வாசமில்லை..
உன்னோடு இருக்கையிலே
எருக்கம் பூவும் எனக்குமுல்லை...!
மணம் மட்டும் மாறலியே..
மனசும் அல்லோ மாறிடிச்சி..
மாயவனே நீ தூரமிருக்க
மழை என்றும் என்கண்ணில் வருது..!
நீ பாலைவனம் போய் இருக்க
பாவிமனம் துடிக்குது இங்கு..
பட்டபாடு போதுமென்று...
பக்கம்வர அழைக்குது இன்று..!
உன்னை நான் நினைக்கையிலும்
உள்மனது வலிக்கிறதே..
விக்கலுடன் உனக்கு வந்தால்..
நீர் கொடுக்க நான் இல்லையென்று..!
கட்டில் தினம் பார்க்கையிலே
உன்பாசம் நினைவில் வர
பாய் வெறுத்து தரைபடுத்தும்
கண்ணில் தூக்கம் இல்லையே...!
நாள்காட்டி பார்த்திருக்க
நல்லநாள் ஒன்றுமறியேன்..
உன்வருகை நான் அறிய
அதுவல்லோ எந்தன் திருநாள்..!
தாலிக்கொடி நான் சுமக்க
என் உயிரோ உன்னிலிருக்க..
உன் நினைவாய்
தவிக்கிறேனே உள்மனதில்...!!!!

...கவிபாரதி...

எழுதியவர் : கவிபாரதி (12-Apr-14, 10:09 pm)
Tanglish : anbin thedal
பார்வை : 583

மேலே