ப்ளீஸ் இந்தக் கவிதையைப் படிக்காதிங்க

இருட்டுக்குள்
அவர்கள்
பார்த்துக்கொள்கிறார்கள் !
இனி
இருட்டு அவர்களைப்
பார்த்துக்கொண்டிருக்கும் !

==============================================

கடன்காரன் !
அவளை
எழுப்பி விட்டு
அவன் மட்டும்
தூங்கிவிட்டான் !

==============================================

எதிரெதிர் திசையில்
ஓடிக்கொண்டிருக்கும்
அந்த இருவருக்கும்
' இலக்கு '
ஒன்றுதான் !

==============================================

இந்த பூஜைக்கு
அலங்காரம்
முடிந்த பிறகே
அபிஷேகம் !

==============================================

மழை
விட்ட பிறகும்
தொடரும்
தூவானம் சொல்கிறது
மீண்டும்
இன்னொரு மழை
பெய்யப் போவதை !

==============================================

அரங்கேற்றம்
ஐந்து நிமிடம் தான் !
ஆயத்தம் தான்
அரைமணிநேரம் !

==============================================

அந்த அறையின்
கதவு ஜன்னல்களை
கவனமாக
சாத்திய அவள்
கண்ணாடியை
மறந்துவிட்டாள் !

==============================================

அந்தத்
தம்பதியருக்குள்
சமாதானம் முடிந்ததும்
சண்டை
துவங்குகிறது !

==============================================

மேலே
நான்கு கால்களும்
கீழே
நான்கு கால்களும்
இப்போது
ஓய்வெடுக்கின்றன !

==============================================

குளியலறையும்
படுக்கையறை ஆகலாம் !
படுக்கையறையும்
குளியலறை ஆகலாம் !

==============================================

பசியாறிய பின்
பசிக்கிறது !

==============================================

புதிதாய்த்
திருமணமான
அந்தப் பெண்ணை
வெட்கப்படுத்துகின்றன
காய்கறிகள் !

==============================================

உஷ்...........
சத்தம் போடாதீர்கள் !
அந்த அறைக்குள்
இரண்டு பேர்
உறங்காமல்
இருக்கிறார்கள் !

எழுதியவர் : குருச்சந்திரன் (19-Apr-14, 7:30 pm)
பார்வை : 218

மேலே