கண்கெட்டபின்னாலே

கார்மேக கூந்தல் என்றேன்
கண்ணீர்மழை பொழியவிட்டாள்
வேல் விழியழகு என்றேன்
இதயத்தில் குத்திவிட்டாள்
வட்டநிலா முகம் என்றேன்-வாழ்வை
அமாவாசையாக்கிவிட்டாள்
அமுதூரும் இதழ்கள் என்றேன்
நஞ்சைமட்டும் எனக்குத்தந்தாள்
பட்டழகு மேனி என்றேன்
கூட்டுப் புழுவாய் கொன்றுவிட்டாள்
பிஞ்சு பாதம் நடப்பதற்கு
செருப்பாகவும் சம்மதம் என்றேன்
அறுந்த செருப்பாய் எறிந்துவிட்டாள்
அடியே பெண்ணே நான்
உன்னைப்பற்றியே சிந்தித்தேன்
என்னைப்பற்றி மட்டுமே சிந்தித்த
என் பெற்றோரை மறந்துவிட்டு
பேதையை நினைத்து பேதலித்தேன்-காதல்
போதையில் விழுந்து வாழ்விழந்தேன்
வீணானது வாலிபம்மட்டுமல்ல
வாழ்க்கையும்தான்
இன்று
ஏதோ தெரு ஓரமாய்
எனக்கே நான் பாரமாய்
நாட்களை நகர்த்துகின்றேன்
நடைபிணமாய் ...