+சாலையோரத்தில் நாங்கள்+

சாலை யோரத்தில் நாங்கள்
தண்ணீரை இழந்து துடிக்கும் மீன்கள்
கண்ணீர் மட்டுமே எங்கள் சொந்தம்
எவருமில்லை எங்கள் பந்தம்

நாள்முழுக்க நிறைய உழைத்தும்
வியர்வை மட்டுமே எம்மை உண்ணும்
மேகப் பெண்ணவள் நொந்து அழுதால்
அன்றே குளியல் வெளிச்சவிடியல்

ஒதுக்கப்பட்டதே எமக்கு உரிமை
அதனாலோ அழைக்கப்பட்டோம் யாமும் ஒதுக்கப்பட்டோராய்
எம்மால் இல்லை யாருக்கும் பெருமை
என்ற நினைப்பாலே வதைக்கப்பட்டோம்

ஒருவேளை மட்டுமே வயித்துக்குசோறு
வருந்தி அழுதாலும் உதவிக்கு யாரு
எல்லோரையும் நல்லா வாழவைக்கும் ஊரு
வாழ்க்கை எங்களுக்கோ பெரும்போரு

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (23-Apr-14, 6:35 am)
பார்வை : 420

மேலே