பின்னர்தான் தெரிந்தது

அவள் மனதில் நிலவேன்றார்கள்
நம்பினேன் அது பால் வெள்ளை என்று
பின்னர்தான் தெரிந்தது
அது பல நேரங்களில்
களங்கப்பட்டே இருக்கிறது நிலவை போல

அவள் குணத்தில் பசு என்றார்கள்
நம்பினேன் அது சாது என்று
பின்னர்தான் தெரிந்தது
பசுவுக்கும் கொம்புகள் உண்டு என்று

அவளுக்கு பல வண்ணங்கள் பிடிக்கும் என்றாள்
நம்பினேன் அது அவள் ரசனை என்று
பின்னர்தான் தெரிந்தது அவள் ஒரு பச்சோந்தி என்று

என் இதயத்தில் எப்போதும் நீயே என்றாள்
பின்னர்தான் தெரிந்தது
அவள் சொன்னது ஒரு பொய் என்று
அவளிடம் இல்லாத ஒன்றில்
நான் எவ்வாறு இருக்க முடியும்

எழுதியவர் : கார்த்திக் . பெ (2-Jun-10, 1:03 pm)
பார்வை : 620

மேலே