நம்பிக்கையுடன்

காற்று மோதி,
காயங்கள் வராது..
வேதனை தீண்டாமல்
வரலாறுகள் உன்னை தொடாது..
"பரிசுகள் போதை தரும்,
தோல்விகள் போதனை தரும்"
உதாசின பேச்சுகள் ஏற்க மறுத்தால்
மணிமகுடம் சூட தகுதிகள் கிடையாது உனக்கு...
கண்களில் விழுந்த தூசியே உறவுகள்
உறுத்திக்கொண்டேயிருக்கும்
உதறி தள்ளிவிடு அதை..
உன்னை உதாசினப்படுத்துவதே
உறவுகள்..
உன்னை உயர வைப்பது அந்த
உதாசினங்கள்...
உதாசினங்களை சந்திக்காத மனிதன்
உயரங்களை எட்ட முடியாது..
மழையாய் முயற்சி செய்
துளிர் விடும் உன் வெற்றி..
"மௌனமாய் நீ நின்றால்
உன் நிழலும்
உனக்கு எதிரி"
உழைக்கும் இடமாக்கு மூளையை..
வெற்றிடமாய் கிடந்தால்,
வெள்ளாமைக்கு பயன்படாமல் போய்விடும்
பேனா முனைகள்
வலி பொறுக்க இயலாவிட்டால்
கவிதைகள் வராது..
தோல்வியின் வலி
பொறுக்க இயலாதவன்,
வெற்றிக்கு கொக்கரிக்க
தகுதி இல்லாதவன்...
உன்னை உதாசினப்படுத்தும் உறவை
நீ உதாசினப்படுத்து..
உன்னை பக்குவப்படுத்தும் தோல்விகளை
நீ சொந்தமாக்கு..
பின் வெற்றி என்னும் சொல்
உனக்கு சொந்தமாகும்...