நடிக்கக் கற்றுக்கொள்
உள்ளதை சொல்லடி-
உளறுவாய் என்பார்கள்!!
உன் உணர்வுகளை சொல்லடி-
பைத்தியக்காரி என்பார்கள்!!
துணிச்சலுடன் வாழடி-
திமிர் பிடித்தவள் என்பார்கள்!!
அஹிம்சையாய்ப் பாரடி-
ஊமைக்குசும்பி என்பார்கள்!!
தன்னம்பிக்கை கொள்ளடி-
தலைக்கனம் என்பார்கள்!!
நியாயதர்மம் பாரடி-
அதிகப்ரசிங்கி என்பார்கள்!!
உன் வேலையுண்டு நீயுண்டு என்றால்
சுயநலவாதி என்பார்கள்!!
என்னவோ பேசட்டும்
இந்த உலகம்;
ஒன்றுமட்டும் கருத்தில்கொள்!!
உலகின் நாக்கைக் குப்பையில்போடு;
உன் மனதின் ஓசையை மட்டும்
உற்றுக் கேளு;
உன்னை உணர்ந்துகொள்;
உலகிடம் நடித்துக்கொள்!!