எப்போதான்பா பேசுவ நீ

தவமாய்த் தவமிருந்து
நீ பெத்த புள்ள,
இப்போ உனக்காக
தவம் கிடக்கேன்!!

அன்பால நீ என்ன
அரவணைக்காத போதும்
உன் அன்பை புரிஞ்சுக்க
ஆசையாய் கிடக்கேன்!!

"அப்பா அப்பா"ன்னு
உருகி உருகி கூப்பிட
ஆயிரம் கனவு
கண்டு கிடக்கேன்!!

உன் வார்த்தை கேக்க,
உன் வழி நடக்க,
ஆயாசமா நா கிடக்கேன்!!

அம்புட்டுப் பாசம்
என்மேல இருந்தாலும்
யாரோ போல
தனியா கிடக்கேன்!!

உன் கிட்ட சொல்ல
ஆயிரம் கதை,
உன் கிட்ட கேக்க
ஆயிரம் கேள்வியோட
அனாமத்தாக் கிடக்கேன்!!

இன்னும் சில வருஷத்துல - என்
வருங்காலத்துக்குப் போயிருவேன்;
இப்போ கூட பேசலைன
எப்போதான்பா பேசுவ நீ??

எழுதியவர் : கீதா (27-Apr-14, 12:07 am)
பார்வை : 105

மேலே