மயங்குகிறாள் ஒரு மாது
மாலையில் மலர்ந்திடும் மலர் கொடி;
என் கூந்தலில் படர்ந்திட!
நீரில் மிதந்திடும் நிலவொளி;
என் நினைவில் கலந்திட!
இலையில் தவழ்ந்திடும் பனித்துளி;
என் உடலில் புகுந்திட!
கூறாமல் கூறி நாணுதே என் கண்கள்!
உனை தேடாமல் தேடித் தவிக்குதே என் இதழ்கள்!
வழிமேல் விழி பூட்டி புலம்பும் தனிமையிலே;
பசலை பாய்ந்து ஏங்கிடுதே மௌன மொழியினிலே!
என் உதிரம் வாடி உதிர்ந்தோடும் முன்னே;
வாகை வெல்ல வாராயோ என்னுயிர் கண்ணே!

