நம்பிக்கையில்

என்மேல் நீ வைத்திருந்த
நம்பிக்கையில்...
எல்லா வலிகளுக்கும்
வழி இருக்கும் என்ற
நம்பிக்கையில்...

கண்மூடி மட்டுமே இந்த
இரவை கழிக்கபோகிறேன்
கனவில் கூட நீ என்னுடன்
இருக்கவேண்டாம் என்று...

பகல்கூட சற்று எளிதாய்
கடந்துபோனது
இந்த இரவு மட்டும் ஏனோ
சற்று கூட நகரவில்லை..
வாழ்வின் கடைசிநாள் வரை
காத்திருக்க விருப்பமில்லை
அதிகாலை ஆரம்பமே
என் முடிவாக இருக்கட்டும்..
ஏனெனில்
மறந்துவிடுவதை விட
இறந்துவிடுவதே மேல்..

இனி என்னை
இரவில் தூங்கவைத்து
அதிகாலை எழுப்பிய
அந்த குறுஞ்செய்திகள்
தேவையில்லை..
என்னுடனே இருக்கவேண்டும்
என்கிற நிபந்தனை இல்லை
எனக்காகவே
இருக்கவேண்டியதும் இல்லை..

என் கைபேசியின் அழகிழந்த
பொத்தான்கள் கூட
என்னை கேட்கின்றன,
என் எழுத்துகளையும் தொலைத்து
இப்போது உன் வாழ்க்கையையும்
தொலைத்துவிட்டாயா? என்று..

இதோ என் கடைசி வரிகள்

நீ உனக்காக இரு
நான் எனக்காக இருக்கிறேன்
இனி நமக்கு வேண்டாம்
அந்த மூன்றெழுத்து நரகம்...

அதிர்ஷ்டம் இருந்தால்
மீண்டும் உனக்காகவே
என்ற நம்பிக்கையில்..

எழுதியவர் : Prasanthvel (28-Apr-14, 9:04 pm)
சேர்த்தது : prasanthvel
Tanglish : nambikkaiyil
பார்வை : 84

மேலே