உன் பார்வை கண்ட என் விழிகள் கலங்குதடி 555

என்னவளே...
துடிக்கின்ற என் இதயம்
துடிக்க மறந்ததில்லை...
புயல் ஓய்ந்த பின்பும்
அலைகள் ஓய்வதில்லை...
என்னை நீ
வெறுத்த பின்பும்...
என் மனம் உன்னை
நினைக்க மறந்ததில்லையடி...
உன் வருகைக்காக
காத்திருந்த என் விழிகள்...
நான் செல்லும்
திசைக்காக காத்திருகுதடி...
தினம் தினம்
என் விழிகள்...
என்னை நீ
வெறுத்த போதும்...
என்னை கண்டவுடன்
நலம் விசாரிக்கும்...
உன் விழிகள்...
உன் பார்வையை கண்ட
என் விழிகள் கலங்குதடி...
உன் பார்வைக்காகவே
வாழ்கிறேனடி...
உன் பார்வை
ஒன்றே போதுமடி...
நான் மண்ணில்
சுவாசிக்க.....