பேரன் குறள்கள் -06

யோரன் குறள்படித்து யோசித்தது:.=குறள் யாப்பு=

வெல்லமோ? கள்ளோ? வெறுஞ்சொற்கள் தாமழகோ?
நல்லதமிழ்ப் பேர்வைக்க நாடு!--------------------------51

பேரன் பெயரில் பெரியோர் நினைவுவரின்
வேரின் பலம்கிடைக்கு மே!------------------------------52

கண்ணாடிப் பெட்டிமீன் கைக்குள் குழந்தைகள்!
விண்ணோடல் எங்ஙன் விரைந்து?--------------------53

இருக்கும் உலகம் இருக்கவே, பேரா!
இறுக்கம் விடுத்தே இரு!-----------------------------------54

ஓங்கி உயர்மரங்கள் ஓரறிவோ? பல்லுயிர்கள்
தாங்கி அவைவளர்க்கு தாம்!-----------------------------55

நீர்கொடுத்துத் தாங்கியே நிற்பதால் நீள்,நிலமும்
வேர்,அணைத்துத் தங்கிவரு மே!-----------------------56

உயரங்கள் கண்டமரம் ஓரிடத் தில்தான்!
துயரங்கள் தாய்மண் தொலைத்து.---------------------57

செங்கீரைத் தண்டே! சிறுமுல்லைக் கொத்தே!நல்
வங்கத்த்து முத்தே!நீ வா!---------------------------------58

பனிச்சோலைத் தொட்டிலில் பார்தூங்கும் காலை
தனி,நடைக்குப் பேரா!கை தா!---------------------------59

இலக்கியச் சாளரம் இவ்விரு கண்கள்!
கலக்குதே என்னுள் கவி!-----------------------------------60
========== ===========

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (7-May-14, 7:48 am)
பார்வை : 92

மேலே