பேரன் குறள்கள் -07=

யோரன் குறள்படித்து யோசித்தது:=குறள் யாப்பு=

நிலவின் குழந்தைகள் நீலவான் விண்மீன்
பலவுமே, பள்ளிவிட்ட தோ?------------------------------61

கண்ணைத் திறந்தால் ஒளி;உனது வாய்,தமிழின்
பண்ணைத் திறக்கும் கதவு!-------------------------------62

தாத்தா நரம்புகளின் தள்ளாமை நீக்கிவிடும்,
பூத்தே வரும்சிரிப் பு!-----------------------------------------63

முதுமைத் தளர்,இருட்டின் முன்,ஒளி, பேரா!
புதுமை விழிகொண்டு பாய்ச்சு!--------------------------64

சாதி, மதபேதம், சாற்றும் மொழிபேதம்,
ஏதும் குழந்தைக்(கு).-----------------------------------------65

வேதம், குரான்,கீதை வேறு தனிப்போதை
ஏதும் குழந்தைக்(கு) இலை!------------------------------66

மழையும் வெயிலும், மலரும் நிலவும்,
குழைத்த பொருள்,குழந் தை! --------------------------67

காலம் மனிதன் கரைசேரச் செய்தனுப்பும்
பாலம் குழந்தையிது பார்!---------------------------------68

காய்ச்சீர்கள் நின்று கனிகின்ற வேளை,வரும்
மாச்சீர் குழந்தயா மா?--------------------------------------69

தாய்சீர் கொடுக்கத் தமர்சீர் எடுக்க,வரும்
பூச்சீர்கள் பேரர்,எனப் பேசு!-------------------------------70
======= ==========

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (7-May-14, 8:39 am)
பார்வை : 98

மேலே