என் சுவாசகாற்று உன்னை நேசிக்கும் 555
![](https://eluthu.com/images/loading.gif)
என் உயிரே...
உன் நினைவுகளோடு
நான் பேசிகொள்வதை போல...
பூமியும் மழையும்
பேசிகொண்டது...
நான் மழையாக
வந்தாலும்...
இடியாக வந்தாலும்
தாங்கி கொள்கிறாயே என்று...
நீ எப்படி
வந்தாலும்...
நான் உன்னை
தாங்கி கொள்வேன் என்றது...
நானும் பூமியும்
ஒன்றுதான்...
நீ என்னை
எவ்வளவு வெறுத்தாலும்...
என் மரணத்திற்கு
பின்பும்...
என் சுவாச காற்று
உன்னை நேசிக்கும்...
முடிந்தால் அன்றாவது
என் சுவாசகாற்றை நேசித்துபார்.....