உன்னை மணக்க உன் விழிகளின் சம்மதம் வேண்டும் 555

என்னழகே...

சின்ன சிறு கிளியே
என்னுயிர் காதலியே...

மானே பொன்மானே
என்னை நீயும் மறந்ததென்ன...

தென்றலாக நான்
வந்தேன்...

உன் கண்களிலே
காணவில்லை...

பூக்களின் மனங்களை
அள்ளி வந்தேன்...

பூவாக உன் கூந்தலில்
சூடவில்லை...

உன் மனம்
என்னவென்று...

நான் அறிய
வழியென்ன...

என் மனம்
என்னவென்று...

நீயும் அறிந்ததென்ன...

இன்பம் தருவியோ
காதலில் எனக்கு...

துன்பம் தருவியோ
காதலில் எனக்கு...

உன் மனமும் என் மனமும்
ஒன்றாய் கலந்து...

ஊரறிய உனக்கு
மாலையிட ஆசை...

நீ தரும் பதில்
இன்பமா... துன்பமா...

என் வாழ்வில்...

சொல்லடி கிளியே
உன் விழிகளால்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (16-May-14, 5:13 pm)
பார்வை : 233

சிறந்த கவிதைகள்

மேலே