நிலவோடு அவள்

...'''' நிலவோடு அவள் ""...

வானத்து அலங்காரமே
ஒவ்வொரு நாளும் நீ
புதுப்புது பொலிவோடு
பரிணமித்து மிளிர்கிறாய்
என்னவளாய் உன்னழகை
உருவகித்து பார்க்கிறேன்
முழு மதியே உன்
நெற்றி மூன்றாம்பிறை
சிமிட்டுமுன் கண்கள்
சொலிக்கும் விண்மீன்
வளைந்த உன் புருவம்
வானவில்லின் உறவு
மழை மேகம்மாயுன்
அலையலை கார்கூந்தல்
மின்னிடும் தேகமாய்
முழுமை பெளர்னமி
ஆவலாய் நானணைக்க
வளர்பிறையாகிறாய்
அலுவலால் பிரிந்திடவே
நீ தேய்பிறையாகிறாய்
எனை சோகத்திலாழ்த்தியே
நீ அமாவாசையாகிறாய்
மீண்டுமெனை தீண்டிட
உதித்து வருகிறாய்
என் முழு மதியே
முத்தான மூன்றாம்பிறையே,,,,


என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (18-May-14, 7:16 pm)
Tanglish : nilavodu aval
பார்வை : 117

மேலே