என் காதலி
சிறகுகள் இல்லாமல் பறந்திடுவேன்
நானும், ஒரு பார்வை நீ தந்தாலே போதும்
இலக்குகள் எல்லாமே நீயாக
வாழ்ந்திடுவேன் நானும், மண மாலை
நீ ஏற்றாலே போதும்
கதிர் ஒளி கூட வேண்டாம்,
காணி நிலம் கூட வேண்டாம்,
உன் விழி பார்வை எனக்கு
வெளிச்சங்கள் தந்திடும்,
உன் மனமேடை எனக்கு
மாளிகை ஆகிடும்
மஞ்சத்தில் புரளும் சுகம்
தன்னை துறப்பேன், உன் நெஞ்சத்தின்
ஓர் மூலையில் இடம் கொஞ்சம் தந்தால்
குடில் வாழ்வும் எனக்கு அற்புதமே
கண்ணே, அதில் துணையாக
நீ இருந்து விட்டால்
எல்லாமே எனக்கு உன்னில்
தான் ஆரம்பம், என்றென்றும்
எனக்கு நீ தானே காவியம்