பெண்மை

உன்
பெண்மையின்
மென்மை
கண்டு தானே,

உன்னை
மணம் முடித்தேன் !

இப்போது
மட்டும்
வன்மையை
வரவேற்கிறாயே !

காதலனாய்
இருந்த போது,

கணவனாய்ப்
போற்றினாய் !

கணவனாய்
இருக்கும் போது,

கடமைக்குக்
காலந் தள்ளுகிறாய் !

மனைவி என்ற
மந்திரச் சொல்லிலிருந்து ,

என்னை
நீ
மீட்டுவதில் ,

எனக்கு
மகிழ்ச்சியில்லை !

மறுபடியும்
நீ
என்
காதலியாகிவிடு !

எழுதியவர் : அசோக் vimala (30-May-14, 8:49 pm)
சேர்த்தது : ashok vimala
பார்வை : 64

மேலே