பெண்மை
உன்
பெண்மையின்
மென்மை
கண்டு தானே,
உன்னை
மணம் முடித்தேன் !
இப்போது
மட்டும்
வன்மையை
வரவேற்கிறாயே !
காதலனாய்
இருந்த போது,
கணவனாய்ப்
போற்றினாய் !
கணவனாய்
இருக்கும் போது,
கடமைக்குக்
காலந் தள்ளுகிறாய் !
மனைவி என்ற
மந்திரச் சொல்லிலிருந்து ,
என்னை
நீ
மீட்டுவதில் ,
எனக்கு
மகிழ்ச்சியில்லை !
மறுபடியும்
நீ
என்
காதலியாகிவிடு !