பேரன் குறள்கள் --14

--------------பேரன் குறள்கள்-14--------------

பஞ்சிகொண் டோட்டவும் பைய எனப்பதறும்
வஞ்சியோ பெற்றாள் வலித்து!----------------------------------------------131

வினைகள் முடித்தவளாய் வீடடையும் தாய்முன்
சுனைபோல் கிடப்பாய்ச் சுருண்டு!------------------------------------------132

ஆடிக் கடலலைக்கும் ஆசையும் வேண்டேன்,நீ
கூடிக் களிக்கின் எனக்கு ! -----------------------------------------------------133

ஊடாது காமம் உவக்காதாம்; பேரா!
நீடாதோ நம்,இந் நிலை!--------------------------------------------------------134

கைம்மாலை விட்டுக் கலுழ்வார்போல் செல்வேன்;உன்
அம்மாவின் கைவிட்(டு) அகன்று!------------------------------------------135
[கலுழ்தல்=கலங்குதல்;உருகுதல்]

மம்மர்கொள் மாலை மயக்கில்லை பேரா!கேள்!
நம்மிடை உள்ள,இந் நட்பு!--------------------------------136

[காதலர்க்கு மயக்கம் தரக் கூடிய மாலை என்பதால், அது ‘மம்மர்கொள் மாலை' யெனச் சொல்லப்படுவது வழக்கு]

செல்சுடர் பின்வரும் சந்திரன்; என்பின்,நீ
நில்லா இருள்விலக்கி நில்!-------------------------------137

மெல்விரல் கொண்டு வருடின் மயில்கொன்ற
நல்விசிறி ஏனோ நமக்கு?----------------------------------138

வீக்கி இழுத்த,அவ் விற்புருவம் பாட்டிக்கு!
தூக்கி,நீ வந்தாய் துணைக்கு!----------------------------139

அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கென் றெல்லாம்
தரப்போந்த துன்பாட்டி தான்!-----------------------------140

========== ====================

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (5-Jun-14, 10:37 am)
பார்வை : 126

மேலே