மாமறையோன்
மாமறையோன்
------------------------
அண்டங்கள் அனைத்துமாய்
எண்ணிலா தாரகையாய்
அவைசார்ந்த கோள்கள் பலவாய்
விண்ணை மண்ணாய்
சிற்றாறாய் மாநதியாய்
ஆர்ப்பரிக்கும் அலைகடலாய்
அமைதியான சமுதிரமாய்
மீனாய், ஆமையைப் பன்றியாய்
புள்ளாய்ப் பாம்பாய்
பால் தரும் பசுவாய்
கதிரவனாய் மதியாய்
தாயாய்த் தந்தையாய்
சத்தியமாய் சத்-சித்-ஆனந்தமாய்
எங்கும் எதிலும் உள்ள
ஆனால் கண்ணிற்கு புலனாகா
மாமறையே பேரொளியே
நீ தான் எந்தன் இறையே
-----------------------------------

