எதற்காக கல்வி

சிந்தனையைத் தூண்டுகின்ற கல்வி வேண்டும்
சீரிய பண்பை வளர்க்கும் கல்வி வேண்டும்.
நல்லோராய் மனிதர் மாறக் கல்வி வேண்டும்
நலங்கெடுக்கும் செயல் தவிர்க்கும் கல்வி வேண்டும்.

பொருள் சேர்க்க மட்டும் பெறும் கல்வியெல்லாம்
சமுதாயம் சீர்கெடவே துணை போகும்.
மேலை நாட்டில் நாம் காணும் உண்மை அதுவே.
ஆறறிவை இழப்பதற்கா கல்வி கற்பீர்?

அநியாய சடங்குகளில் உண்பொருடகளை
வீணடித்து மகிழ்ந்திருத்தல் வேண்டிடுவோமோ?
கற்கால மனிதனும் நாணும் வண்ணம்
தற்கால வாழ்க்கையைச் சமைத்திடுவீரோ?

ஆபாசம் சுயநலம் பேராசையில்
சோம்பலின் சிற்றின்பப் போதைகளில்
பாரதியின் பகற்கனவாம் சமத்துவத்தைப்
பின்பற்றத் துடிக்கின்ற ஆண்கள் பெண்கள்!

ஆபாச ஆடைகளில் தம்பிள்ளைகள்
சின்னத் திரைப் போட்டிகளில் நடமாடி
வலம் வந்து எதிர்பாலர் கண்டு ரசிக்க
பெற்றோரைப் பெற்றவரும் பெருமை கொள்வார்!

ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் காலம்
உடலமைப்பு துல்லியமாய்த் தெரியும் வண்ணம்
ஆடைகளை உடுத்திநமை ஆட்கொள்ளும்
திரைஞானிகளா நமக்கு முன்னோடிகள்?

செல்பேசி இணையதளம் தொலைக்காட்சி
அன்பத் தேனூறும் வற்றாத அமுதசுரபிகள்!
ஆபாசம் வன்முறை பழிவாங்கலை
புத்தம்புது உத்திகளில் அரங்கேற்றி
நாள்தோறும் விருந்தளிக்கும் ஊடகங்கள்!

ஒழுக்கத்தைச் சொல்லித்தர நேரமினறி
மதிப்பெண்கள் மட்டுமெ அள்ளிக் குவிக்க
பிள்ளைகளை இயந்திரமாய் மாற்றிவரும்
தொழிற்சலைகளை ஊக்குவிக்கும் பெற்றோர்கள்!

பண்பாட்டை பக்குவமாய் ஓரந்தள்ளி
மேனாட்டின் சீர்கேட்டை சிக்கெனப் பற்றி
சுயநலத்தை மட்டும் ஊட்டிவிட்டு
பொருள் சேர்க்க மட்டுமா கல்வி வேண்டும்?


;.

எழுதியவர் : மலர் (8-Jun-14, 6:11 pm)
Tanglish : etharkaaga kalvi
பார்வை : 1092

மேலே