சுவாதி
பெண்ணே !
மலருக்கு மலர் சூடி
உன்
அழகு மெச்சிய
தாய் இன்று
மலர் வளையம்
வைத்ததென்ன சோகம்
கருவரையில்
உன்னை சுமக்காவிடிலும்
தன் இமை மூடி
கண்களில் சுமந்த
தந்தை இன்று
தோள்களில் சுமப்பதென்ன
துயரம்
உன் உணர்வுகளுக்கு
உயிர் கொடுத்து
உன் கனவுகளை
நனவாக்க பாடுப்பட்டவர்கள்
எத்தனை பேரோ
நிகரில்லா உணர்வுகள்
நிறைவேறா கனவுகள்
மதியெங்கும் லட்சியங்கள்
மனமெங்கும் ஆசைகள்
உன்னில்
எத்தனை எத்தனையோ
உயிர்க் கொல்லி நோயாம்
தீவிரவாதம்
அதில் ஊறிய
வெறிநாய் ஒன்று
உன் உயிர் வாங்கியதென்ன
கொடுமை
உணர்வறியா
மிருகங்களுக்கு
உயிர் நீளாமல் செய்வதே
சகோதரிக்கு
நாம் செய்யும் அஞ்சலி