மீண்டும் நான் கவிஞனாகிறேன்

அ - ன்னையெனக் காணத் தொடங்குகிறேன்
ஆ - னந்தம் பெருகிடவே.......
இ - னிய பிரபஞ்ச உயிர்களிடம்
ஈ - டிலா அன்பைக் காணத் தொடங்குகிறேன்...!!

உ - ண்மை இன்பம்
ஊ - ற்றெடுக்க உள்ளமதில்
எ - ன்னை மழலையென
ஏ - காந்தமாய் நானுணரத் தொடங்குகிறேன்....!!

ஐ - ம் புலனும் சுத்தமாகி விட்டதாய்
ஒ - யிலாக ஒரு உணர்வு.......

ஓஹோ.......! இப்போது.....

மெ.....ல்....ல.......
மெ.....ல்....ல........

என்னை நான் உணர்கிறேன்.......

ஆம்......

ஆஹா என்ன ஒரு சந்தோசம்..........

மீண்டும் நான் கவிஞனாகிறேன்........... !!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (14-Jun-14, 2:56 pm)
பார்வை : 325

மேலே