+++அம்மா+++நாகூர் லெத்தீப்

மூலக்கருவிலே
முந்நூறு
நாள் சுமந்தவளே.........!

உயிரை
உணவாக
அன்பை உணர்வாக
கொடுத்தவளே.........!

இரத்த
பிண்டமாக
இருளிலே இருந்த
எனக்கு உலகை
காட்டியவளே.........!

அழுதாலும்
சிரித்தாலும்
எனை நீயே புரிவாய்
எனது தேட்டத்தை
அறிவாய்.........!

எனக்கு
எதுவாயினும்
தனக்காக எண்ணிடும்
எனதுயிரே........!

வாடா
மலர்ப்போல
வாழ்ந்து புகழ்
எடுக்க எமக்கு
உலகை காட்டியவள்
நீதானே.........!

சுமந்தவளே
எனது சுமையை
சுமப்பவளே அம்மா.......!

எழுதியவர் : நாகூர் லெத்தீப் (16-Jun-14, 11:00 pm)
பார்வை : 89

மேலே