கண்கள்

நீ இறந்த பின்பும்,
இன்னொருவரை
உலகம் பார்க்க
வைத்தாயே...
இதுவரை உன்
விரல் பட்டு ஆறுதல்
அடைந்த என் அழுகை
இன்று உன்
பெருந்தன்மையில்
ஆறுதல் அடைகிறது..
உன் ஆசிகளுடன்,
இன்னொருவருக்காக
இந்த உலகத்தில்
மீண்டும் நான்...
..............................................................................
இது
வெறும் கண்களுக்கு
மட்டும் அல்ல மற்ற
உறுப்புகளுக்கும் தான்,...
செய்து பாருங்கள்....
நம் உறுப்புகளும்
நம் பெருமை பாடும்,
அடுத்தவர் மூலம்.....
................................