வளர்த்தது
மலர்ச்செடி நட்டு வைத்தேன்;
பாதுகாப்பிற்கு முள்வேலி
இட்டு வைத்தேன்;
நான் இறந்து மகன் வந்தான்,
அப்பா ஆசைப்பட்டது என
மகன் நீர் வார்த்தான்;
வளர்ந்தது;
மகன் இறந்தபின் பேரன்,
நீர் வார்த்தான்;
மேலும் வளர்ந்தது;
பின் பலர்வந்து நீர் வார்த்து,
ஆல்போல் தழைத்து,
அழிக்க முடியாததாய்ற்று;
நட்டது மரித்து போயிற்று என்னோடு,
மதம்;
இட்டது வளர்ந்து விட்டது,
பூஜையும், புனஸ்காரமும்;
மலர்ச்செடி=மதம்;
வேலி=பூஜை,புனஸ்காரம்,சம்பிரதாயம்