என்னை நான் அந்த நொடியில் இழந்தது தான் நிஜமே

காற்றில் மண் எழுந்து
கண்களில் விழுந்து
இரு துளி நீரினை வர செய்து
அது பார்வையை மறைத்து
நொடிகள் நான் குருடனாய் மாறி
பாதைகள் தடுமாறி, கால்கள்
இடறி, கீழே விழுந்திட, ஒரு
கரம் என்னை நோக்கி நீண்டிட
அதை பற்றி நான் எழுந்திட
பின் அது மென் கரம் என்று
நான் அறிந்திட, ஒரு
அறிமுகம் அங்கே
தொடங்கிட
புன்னகை பரிமாறல்கள்
தொடக்கத்தை உணர்த்தியது...!
உதவியை உறவாக மாற்றிட
முடியுமோ? இந்த நொடி
இது நான் அறியாதது
சில நொடிகளில் அவள் உதவி,
சென்று விட்டாள்,
பல நாட்கள் நித்திரையை
தொலைத்து நான்
தவித்து விட்டேன் ....!
அவள் செய்தது எனக்கு
உதவியா? உபத்திரமா?
காற்று அடித்து ஒரு
காதலை துவக்கி வைத்ததா?
இல்லை ஒரு ஆண்மையின்
உணர்வுகளுடன் விளையாடி
விட்டதா?
உதவியில் ஒரு உறவை
எதிர்பார்ப்பது எந்தன்
தவறு தானோ?
எதுவோ? என்னை நான்
அந்த நொடியில் இழந்தது
தான் நிஜமே....!