காசே தான் சகலமடா, காசில்லை, நீ சடலமடா
கருவிலிருந்து, காடு வரை
காசு பேசுகிறது
கருவிலிருந்து உலகத்திற்கு
வந்திட, ஒரு குழந்தை,
கண் மூடி, மண் போக
ஒரு உயிர்
காசு துணை ஆகிறது
காசே தான் சகலமடா
காசிருந்தால் பிறக்கலாம்
போகத்துடன்
இல்லை எறியப்படலாம்
குப்பையிலே
காசிருந்தால் வாழலாம்,
யோகத்துடன்
இல்லை பந்தாடபடலாம்
வீதியிலே
காசிருந்தால் கிடைக்கலாம்
இறுதி மரியாதை
இல்லை அழுகலாம்
அனாதை பிணமாய்
காசே தான் சகலமடா....!
காசில்லை, நீ சடலமடா....!