லட்சியம் தொடுவோம்

போகும் பாதை தெரியாமல்
போதையில் வாழும் மானிடனே
பிறந்த பயனை உணராமல்
கெட்டழியும் நண்பனே !
பிறந்தால் இறப்பு என்பது
ஒரு நாள் வந்துவிடும் ;
நீ செய்யும் சாதனைகளால்
இறப்புக் கூட மறைந்து விடும்
மாய வாழ்க்கையை விட்டுவிடு
உன் இலட்சியத்தை எட்டி தொட்டுவிடு ;
என் இனிய நண்பனே
இவ்வுலகு இறக்கும் வரை வாழ்ந்திடு .....

எழுதியவர் : தேவகி ரவிச்சந்திரன் (8-Jul-14, 2:17 pm)
சேர்த்தது : devakiravichandran
பார்வை : 81

மேலே