லட்சியம் தொடுவோம்
போகும் பாதை தெரியாமல்
போதையில் வாழும் மானிடனே
பிறந்த பயனை உணராமல்
கெட்டழியும் நண்பனே !
பிறந்தால் இறப்பு என்பது
ஒரு நாள் வந்துவிடும் ;
நீ செய்யும் சாதனைகளால்
இறப்புக் கூட மறைந்து விடும்
மாய வாழ்க்கையை விட்டுவிடு
உன் இலட்சியத்தை எட்டி தொட்டுவிடு ;
என் இனிய நண்பனே
இவ்வுலகு இறக்கும் வரை வாழ்ந்திடு .....