சவமாய்-ஆனந்தி
காற்றோடு நான் பேசிய
வார்த்தைகள் எதுவுமே
உன்னை எட்டவே
இல்லையெனினும் பேசி பேசியே
தீர்த்து கொண்டிருக்கிறேன் - என்
பொழுதுகளை......
கண்ணிழந்த காவலனாய் - உன்
நினைவுகளை இருளோடு
பூட்டியிருக்கிறேன்
மொத்தமாய் மனதோடு
மெத்தனமாய் விட்டிட -
எண்ணமற்று .......
எப்பொழுதுமே என்
எழுதுகோல் உன் இரண்டு எழுத்து
பெயரை எழுதவே வேண்டுகிறது
வெட்கமற்று....
எத்தனை முறை தேடி நீ
கிடைக்காத போதும் என்
விதியையே நிந்தித்து
கொண்டிருக்கிறேன்....
உன் கண்ணோடு நான் கண்ட
கனவுகளெல்லாம் என்றோ
மண்ணுக்குள் சவமாய்
இன்று நானும் நடை- சவமாய்
உன்னிடம் பேசிய ஓரிரு
வார்த்தைகளில் மட்டுமே இன்னும்
என் நேசத்தின்
உயிர்துளி ஒட்டியிருக்கிறது
என் மரணபடுக்கையிலும்
உன் மலர் முகம்
காணவே எண்ணப்பட்டிருப்பேன்
தெரிந்தே விளக்கினில்
விழும் விட்டில் பூச்சியாய்...