மனம் குளிரட்டும்

மனம் குளிரட்டும் .....!!!
----------------------------

இறைவா ...
என்னை அழைத்து விடு
ஒருவேளை உணவுக்கு
தினமும் எங்கும் இந்த
ஈனப்பிறப்பு வேண்டாம் ...!!!

ஒரு துளி தண்ணீர் ....
மேகத்தில் இருந்து வந்தால்
மழை ....
என் உடலில் இருந்து வந்தால்
கண்ணீர் ....
என் உடலில் ஈரம் வற்றுகிறது
ஊற்றி விடுங்கள் இந்த
தண்ணீர் போத்தல் நீரை ...
அப்போது என்றாலும் மனம்
குளிரட்டும் .....!!!


கே இனியவன்
படத்துக்கு ஏற்ற கவிதைகள்

எழுதியவர் : கே இனியவன் (15-Jul-14, 2:26 pm)
பார்வை : 60

மேலே