கண்ணீர் அஞ்சலி

கண்ணில் உயிரை வைத்துகொண்டு
இன்று காற்றில் கலந்துவிட்டாய் - அப்பா
இந்த மண்ணில் உங்களை போல்
இனி யாரை நாங்கள் காண்போம்

விண்ணில் நட்சத்திரமாய் மின்னும் பிரிந்த உயிர்
என்று பிறர் சொல்லி கேட்டதுண்டு - அப்பா
உன்னை எந்த விண்மீனாய்
நான் என்று காண்பேனோ

அன்னை அடித்தாலும் அரவைனைத்து காத்தாயே
அத்தனை முறைதான் என்னை நாளெல்லாம் அழைத்தாயே - அப்பா
இனி என்னை உன்னைப்போல் யார் அழைக்கக்கூடும்
உன் உடலோடு இந்த வீடும் வெறிச்சோடி போகும்

எழுதியவர் : மதனா (16-Jul-14, 9:51 am)
Tanglish : kanneer anjali
பார்வை : 11242

மேலே