ரயிலும் மாடும்
வேகமாக செல்லும் ரயிலில் போனால் விபத்து நடக்கும் வாய்ப்பு உள்ளதால் சாதாரண passenger ரயிலில் செல்ல முடிவு எடுத்தார் குமரன் .....
சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில ஒரு எருமை மாடு குறுக்கே வந்தது...பயணிகள் சிலர் அதை துரத்தி விட மீண்டும் ரயில் பயணத்தை தொடர்ந்தது...
சிறிது நேரத்தில் மீண்டும் ஒரு எருமை மாடு....
அதே துரத்தல்....
மீண்டும் பயணம்....
சிறிது நேரத்தில் மீண்டும் ஒரு எருமை மாடு....
அதே துரத்தல்....
மீண்டும் பயணம்....
குமரன் கேட்டார்....
"இந்த பகுதியில் எருமைகள் அதிகமோ???".....
எரிச்சலாக சக பயணி பதில் தந்தார்......
"நீங்க வேற ....அதே எருமை மாடுதான்...மொத வந்ததே அதேதான் ....மறுபடி மறுபடி ரயில முந்தி வந்து தண்டவாளத்துல படுத்துக்குது "...
குமரன் "!!!?????"...
எவ்ளோ வேகம் ..... எருமை ..... ரயில் இல்லப்பா...
நன்றி :: வார மலர் -தின மலர்