மனதோடு மனம் பேசும்

எல்லைத்தாண்டி சென்று எண்ணமுடியா
நிகழ்வுகளை எதிரில் கண்டு களித்தாலும்

கொள்ளை கொள்ளும் ரம்மியமான
காட்சிதனில் மனம் துள்ளி குதித்தாலும்

எண்ணிலடங்கா உணவு வகைகளை
உண்டு வாயார சுவைத்தாலும்

பல்வேறு கலாச்சார மனிதர்களை
பார்த்து பழகி மகிழ்ந்தாலும்

அதிநவீன மாளிகையிலே அரிதான
வாழ்வை அழகாக வாழ்ந்தாலும்

நம் நட்பெனும் உறவுகளின் நினைவுகள்
என்றும் மனதோடு மனம் பேசும் - நம்

உறவுகளை நேரில் கண்டு ஒன்று கூடி
உறவாடி உளமார கூடி கதைபேசி
அனைவரும் சேர்ந்தமர்ந்து உண்ணும்
ஒரு பிடி உணவில் வயிறோடு மனம் நிறைந்து
ததும்பும் ஒப்பற்ற மகிழ்ச்சியின் சுகம் தனி சுகம்

எழுத்து உறவுகளை கண்ட மகிழ்ச்சியில்
அந்த தனி சுகத்தில் இன்று நானும்...

...கவியாழினிசரண்யா ...

எழுதியவர் : கவியாழினிசரண்யா (20-Jul-14, 1:52 pm)
பார்வை : 387

மேலே