இருவரி மந்திரம்
1998 . ஜனவரி 29 ...
வாழ்க்கை
வாடிப்போக
தோல்விகள்
தொடர்ந்து போக ...
ஆறாத வலிகளோடும்
அவமான வடுக்களோடும்
சென்னை துறந்தேன்.
ஐதராபாத் அடைந்தேன்.
எடுத்து வந்தது
இரண்டாயிரம்
(இரயிலில் டைரியில்)
எழுதியது இரண்டே வரி.
" நான் உங்களை ஜெயிப்பேன்.
200% ஜெயிப்பேன்.
ஒருவேளை தோற்றால்
என் கல்லறையில்
காறி துப்புங்கள் "
தொடர்ந்தது நாட்கள்...
தோற்ற போதும்
தோல்வி பயம்
தோன்றிய போதும்
டைரி எடுப்பேன்.
அவ்விரு வரி படிப்பேன்.
உக்கிரமாய்
பிடரி சிலர்க்கும்.
உதிரம் மொத்தம்
உழைக்க உந்தும்.
உழைத்தேன் .ஜெயித்தேன்.
இப்போதும் இகழ்பவர்
இருக்கத்தான் செய்கிறார்கள் .
போனவர் இடங்களில்
புதியவர் வருகிறார்கள் .
அவர்கரம் குலுக்கி
அகத்திலே உரைப்பேன்.
" அவ்விரு வரி இன்று
அவசியம் படிப்பேன் "