செய்யின் அசையாது நிற்கும் பழி - ஆசாரக் கோவை 73
நகையொடு கொட்டாவி காறிப்புத் தும்மல்
இவையும் பெரியார்முன் செய்யாரே செய்யின்
அசையாது நிற்கும் பழி. 73 ஆசாரக் கோவை
பொருளுரை:
உரக்கச் சிரிப்பது, கொட்டாவி விடுவது, காறி உமிழ்வது, தும்முவது
ஆகிய செயல்களை அரசர் முன்பு விபரம் அறிந்த அறிவுடையார் செய்ய மாட்டார்.
அவ்வாறு செய்தால் அவர்மீது குறையாத பழி நிலைக்கும்.
கொட்டுதல் - விடுதல், இதனை ஆவி கொட்டு
என்பதன் இலக்கணப் போலியென்பர்.
பழி அசையாது நிற்கும் - பழிமாறாது நிலைக்கும்.