என்னருமை விண்மீனே

என்னருமை விண்மீனே,

நிலவில்லாத என் வானத்தில்,
நீ சின்னஞ்சிறு தேவதையாக,

நினைவிழந்து நின்னை இரசிக்கும்,
நான் மழலைக் கவியாக,

என்னை கண்டு தினமும்,
கண் சிமிட்டும் உன்னிடத்தில்,

என்ன வேண்டுமென கேட்பேன் ?
உன்னைத் தவிர நான் !

எழுதியவர் : கர்ணன் (26-Jul-14, 11:05 pm)
பார்வை : 1553

மேலே