பரந்த மனப்பான்மை

கல்யாண ராத்திரி அன்று
கதவுகள் சாத்திய பின்பு ...
பேசலாமே என்றான்
ஆசைக் கணவன்.!

பிடித்த எழுத்தாளர் யார் ? கேட்டான்.!
பாலகுமாரன் என்றேன் .
அடடா என்றான்.!
அருமை என்றான்.!!

பாடகர் ?
பாலு.

இசை ?
ராஜா.

நடிப்பு ?
கமல்.

அரசியல் ?
லீக்வான் யூ.

அருமை அருமை !
பெருமை அடைகிறேன்.!!
கை குலுக்கினான்.
கேள்வி தொடர்ந்தான் .!

விளையாட்டு ?
கபில்தேவ் .

கவிதை ?
கண்ணதாசன்.

தொழில் ?
ரத்தன் டாடா.

தொகுப்பாளர் ?
பிரணாய் ராய்.

நட்பு ?
கூட படிச்ச கல்யாண் என்றேன் .

"ஓ....அப்படியா ???"
அப்படியே மௌனமானான்.

பாவம் ?!
இதற்கு மட்டும்
பெண்பெயரை
எதிர்பார்த்தான் போலும்.
"பரந்த மனத்தான்".

எழுதியவர் : ராம் வசந்த் (28-Jul-14, 1:02 pm)
பார்வை : 217

மேலே