பாட்டி சொன்ன கவிதை

கதை சொல்லும் பாட்டி
உனக்கு
கவிதை சொல்ல வராதா
என்றாள் பேத்தி !

அடி பெண்ணே !
தாயும் மகளும்
நான் படைத்த
கவிதைகள் தானேடி
பேத்தி
என்றாள் பாட்டி !

அசத்திட்ட பாட்டி
என்றாள் பேத்தி !

எழுத்தில்
கவிதையில் பதியவா
பாட்டி சொன்ன கதையில் பதியவா
என்று யோசிக்கிறாள் பேத்தி !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (29-Jul-14, 8:35 am)
பார்வை : 1322

மேலே