கிராமத்து காதல்

உன் இதயத்தை
உன் இதயமே
சுமப்பது சாத்தியமா???
நீ நேசிக்கும் இதயம்
உன்னை நேசித்தால்
நிச்சயம்.
உன் மனதில்
அவளிருக்க,
அவளுக்குள் நீ இருக்க.
உன்னை சுமந்த தாயைப் போல்
உன்னையே நீ சுமப்பாய்
உன் இதயத்தில்.
காதலின் வருகையால்..
காதலின் வருகையே
ஒரு மனிதனில் இத்துனை
மாற்றங்களை இழைத்தால்,
காதலின் கடைசியில்???
மழைத்துளிகள் மண்ணில்
விழுவதுபோல்,
அவள் விழிகள்
உம்மனதில் விதையாய்
விழுந்துபோகும்..
விதையின் வேர்கள்
உன் இதயத்தை
கிழிக்கும் போதெல்லாம்
ஓர் இணைப்புரியாத போதை மயக்கத்தை
நீ உணர்வாய்..
மயக்கத்தில்,
நீ உன்னை மறப்பாய்.
உன் தாயை மறப்பாய்.
உன் தந்தையை மறப்பாய்.
ஏன், இந்த உலகத்தையே
மறந்து அவள்தான்
உன் உலகம் என்பாய்..
விதை வெடித்து,
உன் இதயத்தை கிழித்து
வெளிவரும் போதுதான் தெரியும்
வளர்ந்தது காதல் செடியல்ல
கள்ளிச் செடியென்று..
தவழும் வயதில்
தாய்ப்பால் தேடும்
உம்கரங்கள்,
தாவும் வயதில்
காதல் பாலைத்தேடி
ஏரிக்கரையோரம் ஒதுங்கும்.
கள்ளிச்செடி நாடும்..
ஆம்,
காதலின் கடைசியில்
கள்ளிச்செடியும்
காதல் பால்வார்க்கும்...