என்னவளுக்கு ஒரு கடிதம்
என்னவளே
வலி கொண்ட இதயம் இங்கு கண்ணிர் வடிக்கின்றது ....
வலி தந்த உன் இதயமோ அங்கு ....... சிரித்து கொண்டிருக்கின்றது .....
என்னவளே உன்னை உயிராய் நினைத்ததற்கு நீ தந்த இந்த வெகுமதி
இன்னும் என் எத்தனை ஜென்மங்களுக்கு தொடர்ந்து வரும் ...?
என்ற கேள்விக்கு பதில் இல்லை என்னிடம் .....
உயிரான என் காதலை நீ புறந்தள்ள .... காரணம் என்ன ?
என்னவளே நினைவில் கொள் .....
என்னை விட இன்னும் அழகாய் .... அறிவாய் ....
மண்ணில் உள்ள எல்லாம் கொண்ட ஒருவன்
உனக்கு கிடைக்கலாம் ஆனால்......
உன்னை எந்தன் உயிராய் எண்ணும்
என் போன்று ஒரு அன்பானவன் கிடைக்க மாட்டான்
என எல்லோரையும் போல் உனக்கு சாபம் கொடுக்கும்
மனம் கூட எனக்கு இல்லையடி ....
இங்ஙனம் ......
நீ எங்கிருந்தாலும் நலமோடு வாழ
அந்த எல்லாம் வல்ல இறைவனை உனக்காய்....
வேண்டி நிற்கும் உன்னவனாய் வாழ ஏங்கிய ஊமை உள்ளம் ... .......