பற்றிய வழியினிலே உயர்ந்திடுவர்
பிறந்திட்ட நிலையால் இந்நிலையா
பிழைத்திட வழிதேடி இக்கலையா !
வறுமைக்கு வயதென்று வரம்பேது
வறியவர்க்கு வளம்பெற வழியேது !
வாழ்ந்திட வழியென்று வையகத்தில்
வரைந்திட்ட விதிஉண்டா கையளவில் !
உயிர்வாழ உலகினிலே உள்ளவரை
உள்ளதொழிலில் ஒன்று இறுதிவரை !
கற்றிட வழியின்றி உழைத்திடுவர்
பற்றிய வழியினிலே உயர்ந்திடுவர் !
கைவண்ணமே கைத்தொழிலானது
கலைஎண்ணமே கைகொடுக்கிறது !
வலம் வரட்டும் வஞ்சமிலா பிஞ்சுகள்
வளம் பெறட்டும் வளரும் நெஞ்சங்கள் !
பழனி குமார்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
